×

விழுப்புரம் மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பழுது

விழுப்புரம்: விழுப்புரம் மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பழுதானது. EVM வைத்திருக்கும் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் 20 நிமிடங்கள் வேலை செய்யாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யு.பி.எஸ். பழுது காரணமாக மின் தடை ஏற்பட்டு சிசிடிவி கேமராக்கள் 20 நிமிடங்கள் செயல்படவில்லை என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் சுமார் 30 நிமிடங்கள் வேலை செய்யவில்லை. இன்று காலை 9.28 மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் ஸ்ட்ராங் ரூமுக்கான சி.சி.டி.வி. கேமராக்கள் திடீரென நின்றதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் மீண்டும் 9.56 மணிக்கு சிசிடிவி கேமராக்கள் செயல்பட தொடங்கியது. யு.பி.எஸ்.-ல் மின்தடை ஏற்பட்டு, பின் அது சரி செய்யப்பட்டதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பழனி விளக்கம். விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

The post விழுப்புரம் மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பழுது appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Dinakaran ,
× RELATED மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக கூறப்பட்ட...